டீ என்னும் அற்புத பானம்!
டீ எனப்படும், "தேநீர்' நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. நாம் பொதுவாக, "சுறுசுறுப்பு பானமாக அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது, தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும், "தேயிலை டீ' தவிர, பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...
*சூடான லவங்கப்பட்டை டீ, பெண்களுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மன அழுத்தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டு, சுதந்திரமாக உணர உதவும். மேலும் சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "மசாலா டீயும், சிலோன் டீயும் இதமளிக்கும்.
*கிரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் அல்லது பிளேவனாய்டுகள் ஒட்டு மொத்த உடல்நலத்துக்கு நல்லது. குறிப்பாக, புற்றுநோய் வராமல் தடுக்கும். புற்றுநோய் போன்ற ஆபத்துகளுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் உதவுகின்றன.
* மூலிகை டீயில் டேனின் இல்லை. எனவே, நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்தலாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
*இஞ்சி டீ கொஞ்சம் காரசாரமாக இருந்தாலும், இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாக பெண்களுக்கு.
*அஸ்வகந்தா டீ மனநிலையை உயர்த்தும். மனதுக்கும், உடம்புக்கும் ஒரு துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஆக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment